திருவருட்பா  97. திருமருந்தருள் நிலை

பனகஅணைத்  திருநெடுமால்  அயன்போற்றப்  புலவரெலாம்  பரவ  ஓங்கும் 
கனகமணி  அம்பலத்தே  பெரியமருந்  தொன்றிருக்கக்  கண்டேன்  கண்டேன் 
அனகநடத்  ததுசச்சி  தானந்த  வடிவதுபே  ரருள்வாய்ந்  துள்ள 
தெனகமமர்ந்  திருப்பதெல்லாம்  வல்லதுபேர்  நடராசன்  என்ப  தம்மா. 
1
திருநெடுமால்  அயன்தேடத்  துரியநடு  ஒளித்ததெனத்  தெளிந்தோர்சொல்லும் 
ஒருகருணை  மருந்துதிரு  அம்பலத்தே  இருந்திடக்கண்  டுவந்தேன்  அந்தோ 
அருவுருவங்  கடந்ததுபே  ரானந்த  வடிவதுநல்  லருள்வாய்ந்  துள்ள 
திருமையும்நன்  களிப்பதெல்லாம்  வல்லதுபேர்  நடராசன்  என்ப  தம்மா. 
2

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com