திருவருட்பா  91. தனித் திருப்புலம்பல்

திங்கள்  விளங்கும்  சடைத்தருவைத்  தீம்பாற்  சுவையைச்  செந்தேனைச் 
செங்கை  மருவும்  செழுங்கனியைச்  சீரார்  முக்கட்  செங்கரும்பை 
மங்கை  மலையாள்  மணந்தபெரு  வாழ்வைப்  பவள  மலைதன்னை 
எங்கள்  பெருமான்  தனைஅந்தோ  என்னே  எண்ணா  திருந்தேனே. 
1
அன்பர்  இதய  மலர்க்கோயில்  அமர்ந்த  பரமா  னந்தத்தைத் 
துன்பம்  அகலச்  சுகமளிக்கும்  தூய  துணையைச்  சுயஞ்சுடரை 
வன்ப  ரிடத்தின்  மருவாத  மணியை  மணியார்  மிடற்றானை 
இன்ப  நிறைவை  இறையோனை  என்னே  எண்ணா  திருந்தேனே. 
2
ஒருமைப்  பயனை  ஒருமைநெறி  உணர்ந்தார்  உணர்வின்  உள்ளுணர்வைப் 
பெருமைக்  கதியைப்  பசுபதியைப்  பெரியோர்  எவர்க்கும்  பெரியோனை 
அருமைக்  களத்தில்  கருமைஅணி  அம்மான்  தன்னை  எம்மானை 
இருமைப்  பயனுந்  தருவானை  என்னே  எண்ணா  திருந்தேனே. 
3
கறையோர்  கண்டத்  தணிந்தருளும்  கருணா  நிதியைக்  கண்ணுதலை 
மறையோன்  நெடுமாற்  கரியசிவ  மலையை  அலையில்  வாரிதியைப் 
பொறையோர்  உள்ளம்  புகுந்தொளிரும்  புனித  ஒளியைப்  பூரணனாம் 
இறையோன்  தன்னை  அந்தோநான்  என்னே  எண்ணா  திருந்தேனே. 
4

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com