Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 64

அறத்துப்பால்இல்லறவியல்7. புதல்வரைப் பெறுதல்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்சிறுகை அளாவிய கூழ்.

amizhtinum ARRa initEtam makkaLsiRukai aLAviya kUzh

Meaning in English

Than God's ambrosia sweeter far the food before men laid, In which the little hands of children of their own have play'd

பொருள் / உரை

மு.வரதராசன்

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

பரிமேலழகர்

அமிழ்தினும் ஆற்ற இனிதே - சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு. (சிறுகையான் அளாவலாவது, 'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188)

சாலமன் பாப்பையா

தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com