திருவருட்பா  111. சல்லாப லகரி

சுந்தர  நீறணி  சுந்தரர்  நடனத்  தொழில்வல்லார் 
வந்தனர்  இங்கே  வந்தனம்  என்றேன்  மாதேநீ 
மந்தணம்  இதுகேள்  அந்தனம்  இலநம்  வாழ்வெல்லாம் 
அந்தரம்  என்றார்  என்னடி  அம்மா  அவர்சூதே. 
1
நம்பல  மாம்என  நன்மனை  புக்கார்  நடராஜர் 
எம்பல  மாவீர்  எம்பெரு  மானீ  ரேஎன்றேன் 
வம்பல  மடவாய்  எம்முடை  இன்ப  வாழ்வெல்லாம் 
அம்பலம்  என்றார்  என்னடி  அம்மா  அவர்சூதே. 
2

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com